History

Layer 114@2x
கேளக்கியர் வரலாறு

இவருக்கு என்று ஜீவ சமாதியும் பிறந்த இடமோ கோவிலோ இதுவரை எதுவும் இல்லை, முதன்முதலாக கேளக்கியர் சித்தருக்கு கோவில் திரு. அசோகா என்பவரால் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் மாரப்பன் பாளையம் என்னும் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு கோவில் எழுப்பப்பட்டதிலிருந்து இவருக்கு பவானி சித்தர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

தமிழ்நாட்டில் இவருக்கு வேறு எங்கும் கோவில்களோ சிலைகளோ, ஜீவசமாதியோ எதுவும் கிடையாது. அப்படி ஏதேனும் தகவல் எதிர்காலத்தில் கிடைத்தாலும் அதுவும் முற்றிலும் பொய்யான தகவல் ஏனென்றால் கேளக்கியர் என்ற பெயர் திரு. அசோகா என்ற ஜோதிடரிடம் கனவில் சொல்லப்பட்ட வார்த்தை இப்படி ஒரு தகவல் கூகுள் நிறுவனத்திடம் இல்லை.

Layer 114@2x
கேளக்கியர் சித்தர் என்பவர் யார்?

2023 ம் ஆண்டு ஜூன் மாதம் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த திரு. அசோகா என்னும் ஜோதிடரின் கனவில் தோன்றி ஒளியின் ரூபத்தில் பேசிய சித்தர் தான் கேளக்கியர் சித்தர்.

அப்போது இரண்டு மந்திரத்தை கேளக்கியர் சித்தர் கொடுக்கின்றார் 

உனக்கு எப்போது உதவி தேவைப்படுகிறதோ இந்த மந்திரத்தை சொல்லி கூப்பிடு நான் வருகிறேன் என்று அவரிடம் கூறியிருக்கிறார்.

இந்தப் பெயரை அவர் வாயாலேயே திரு. அசோகா என்பவருக்கு உரைத்தார். நாமாக வைத்த பெயர் அல்ல.


கேளக்கியர் சித்தர் எதற்காக அசோகா அவர்களுக்கு காட்சி கொடுத்தார்?

திரு. அசோகா என்பவர் திருப்பூரில் சொந்தமாக தொழில் நடத்தி வந்தவர் தொழில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தார் அந்த நேரத்தில் கடவுளை நோக்கி ஒரு கூக்குரல் இட்டார் அதாவது இத்தனை தெய்வங்கள் இருந்தும் யாரும் என்னை ஏன் காப்பாற்ற வரவில்லை? 

ஒருவேளை எந்த தெய்வம் வந்து என்னை காப்பாற்றுகிறதோ அந்த தெய்வத்திற்கு ஒரு மிகப்பெரிய கோவில் கட்டுவேன் என்று திரு. அசோகா கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார்.

அன்று இரவு கனவில் ஒளியின் ரூபத்தில் ஒரு தெய்வம் அசோகா அவருடன் பேசுகிறார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த உரையாடல் தொடர்கிறது, விடிந்ததும் ஒரே ஆச்சரியம் , இரவு நடந்தது உண்மைதானா நிஜமாலுமே கனவில் வந்து பேசியது கடவுள் தானா என்ற குழப்பம் அசோகா அவருக்கு இருந்தது.

DeWatermark.ai_1744811295970

கேளக்கியர் வழிபாட்டு முறை:

குளித்து சுத்தபத்தமாக மந்திரம் சொல்ல வேண்டும் வாய்விட்டு மந்திரம் சொல்ல வேண்டும்.

ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ!!!
உங்கள் வாழ்க்கையில் ஒரு சின்ன விஷயத்தை இந்த மந்திரத்தை 1008 முறை தினமும் உற்சாடனம் செய்து கேட்டுப்பாருங்கள் ஏழு நாட்கள் தொடர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து சுத்தபத்தமாக இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரம் சொல்லும் போது ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் ஒரு நெய் தீபம் வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும் ஏழு நாட்கள் 1008 முறை தொடர்ந்து இந்த வழிபாட்டு முறை மேற்கொள்ளும் போது நீங்கள் சித்தரிடம் எதைக் கேட்டீர்களோ அதை உங்கள் மனதில் வைத்து வழிபாட்டை தொடர வேண்டும் இந்த முறையில் நீங்கள் நினைத்த காரியம் ஏழு நாட்களுக்குள் நிறைவேறும் நிச்சயம்.
ஓம் ஐம் ஹ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ!!!

முதல் மந்திரத்தை விட இரண்டாவது மந்திரம் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த மந்திரத்தை தினமும் உற்சாடனம் செய்யும் போது உங்க வாழ்நாளில் அடைய வேண்டிய இலக்குகளை மூன்று மாதத்திற்குள்ளாக அடைந்து முடித்து விட முடியும்.. கேளக்கியர் என்பவர் மகா சக்தி பொருந்தியவர் .

கேட்டதை கொடுப்பவரே கேளக்கியர் சித்தர்..!!!

கேளக்கியர்  கேள் என்பதே இத்து திருக்கோவிலின் மிகச்சிறந்த வாசகம்.